வியாழன், 30 ஜூன், 2016

பிறையதிக சித்து

பிறையதிக சித்து

பிறையதிக சித்து
பாரப்பா இன்னுமொரு சேதிகேளு
 பண்பான பிறையதிகச் சித்து சொல்வேன்
காரப்பா திகைப்பூண்டு தனைக்கருக்கி
 கருவான ஏரண்டத் தெண்ணைவிட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத்தாட்ட
 விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும்
சேரப்பா சிமிழ்தனிலே பதனம்பண்ணித்
 திருவான பதிநோக்கித் திலகம் போடே


போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா
 போக்குடனே நாலு திக்கும் பார்த்தாயானால்
நாட்டமுடன் பிறையதிக மாகத் தோன்றும்
 நாரான மானிடர்க்கு அப்படியே காணம்
வாட்டமுடன் இடது கண்ணை மூடிப்பார்த்தால்
 வளமான சூரியன் போல் வரிசை காணும்
காட்டாதே உலகிற்க்கு இந்தநூலை
 கர்தவிதி தீர்த்தவர்க்கு காட்டு காட்டே
                                                                           - அகத்தியர் 64 சித்துகள்

பொருள்:

                     திகை பூண்டை கருக்கி ஏரண்டதென்னை விட்டு  கல்வத்திலாட்ட  அது மை போலாகும். அதை ஒரு சிமிழில் பதனம் பண்ணவும். அம்மாவசை இரவில் அந்த மையை எடுத்து திலகமிட நாலு திசைகளும் வெளிச்சமாக தோன்றும். இடது கண்ணை மூடி வலது கண்ணில் பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பது போல தெரியும்...  இதுவே பிறையதிக சித்துவாகும்

புலிப்பாணி வெற்றிலையில் மை

புலிப்பாணி வெற்றிலையில் மை

                   - புலிப்பாணி  வெற்றிலையில் மை
"பாரப்பா நிலவானை மலைகள் தோறும்
பண்பாகத் தானிருக்கு மறிந்து பாரு
வாரப்பா வதினுடைய விரையைத் தானும்
வளமாகப் பத்துபல மெடுத்து வந்து
சீராப்பா தலைமஞ்சள் கொடியு மாவுஞ்
சிறப்பாக முப்பாக முப்பூவும் வராகள் கூட்டித்
தேரப்பா வில்லைதட்டி யுலரப் போடு
திறமாக யுலர்த்தியதைத் தயிலம் வாங்கே."

- புலிப்பாணி -

மலைகளில் நிலவாகை என்று ஒருவகை செடி வளர்ந்திருக்கும்அந்த செடியைக் கண்டு பிடித்து அதன் விதையில் பத்து பலம் எடுத்து அதனுடன் தலைமஞ்சள் கொடியின் மாவு ஒரு விராகனும்முப்பூ ஒரு விராகனும் சேர்த்து நன்றாக அரைத்து வில்லைகளாகத் தட்டி அந்த வில்லைகளை நன்கு உலரவைத்து பின்னர் அதில் இருந்து குழித்தைலம் இறக்கி எடுத்துக் கொள்..

"வாங்கியே ஆள்காட்டி முட்டை தன்னை
வளமான சிற்றண்டத் தயிலம் போலே
தாங்கியே வாங்கியந்தத் தயில நேரே
தயவாகத் தானெத்துச் சிமிழிதனில் வைத்து
ஓங்கியே களவுமுதற் சூன்யம் யாவும்
உற்றுப்பார் தோற்றுமடா கள்ள மெல்லாம்
நீங்கியெ யதுகண் பிடித்துக் கொண்டு
நினைவாகக் குருபாதம் பணிவாய்த் தானே"

- புலிப்பாணி -

ஆள்க்காட்டி என்ற குருவியின் முட்டைகளைக் கொண்டு சிற்றண்டத்தைலம் போல தைலம் இறக்கிஅந்த தைலத்துடன் முன்னர் செய்த குழித் தைலத்தையும் சம அளவில் கலந்து சிமிழ் ஒன்றில் சேமித்து வைத்தல் வேண்டும்.

களவு போனாலோ அல்லது யாராவது சூனியம் செய்வினை போன்றவை செய்தாலோ அவற்றை செய்தவர் யார் என்று அறிய ஒரு வெற்றிலை ஒன்றை எடுத்து அதில் சிமிழில் சேமித்த தைலத்தில் சிறிது எடுத்து தடவி குருநாதரை நினைத்து வணங்கி பார்த்தால் திருடியதுசூனியம் செய்வினை ஏவல் செய்தது யார் என்று அதில் தெளிவாகத் தெரியும் என்கிறார் புலிப்பாணி.

போகர் பச்சோந்திவித்தை

போகர் பச்சோந்திவித்தை

போகர் பச்சோந்திவித்தை
ஒரு பவுன் தங்கம் வாங்கி அதை இரண்டு காசாக அடித்துஒன்று லக்ஷ்மி ஒன்று விஷ்ணு  உருவம் பதித்து எடுத்து கொண்டு,இரண்டு பச்சோந்தி,ஆணும் ,பெண்ணும் புணரும் சமயம் பிடித்து வந்து ஆணின் வாயில் பெண் காசும் ,பெண்ணின் வாயில் ஆண் காசும் செலுத்திஆற்றில் அக்கறையில் ஒன்று இக்கறையில் ஒன்று புதைத்துநடு ஆற்றில் நின்று கொண்டு பைரவ மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் ஏழு நாட்கள் ஜெபம் செய்தால்ஆண் பச்சோந்தி பெண் பச்சோந்தியுடன் வந்து சேரும். உடனே எடுத்து அந்த பச்சோந்திகளை ஆற்றில் வீசி விட்டு அந்த காசுகளை பத்திரப்படுதிக் கொள்ளவும். 
           இதில் பெண் உருவம் உள்ள காசை ஒரு பெட்டியில் வைத்து விட்டு ,
ஆண் காசை விற்பனை செய்து விடலாம்அது பெண் காசு உள்ள பெட்டிக்கு வந்து விடும். இதை தினம் விற்றாலும் நம்மிடம் வந்து சேரும்பெண் காசு எங்கு உள்ளதோ அங்கு ஆண்  காசு வந்து விடும். இதை ஏழைகளிடம் விற்பனை செய்வது பாவமாகும். உலோபிகருமி,சண்டாளன் இவர்களிடம் விற்பனை செய்து ஏழைகளுக்கு உதவலாம்.

பைரவ மந்திரம்:
                                ஓம் ஹ்ரீம் வாம் வடுகாயா ஆபத்தாறணாய வடுகாய ஹ்ரீம் ஓம்...."

 இந்த மந்திரத்தை ஜெபம் செய்ய வேண்டும்

ஸ்ரீ முனீஸ்வரன் பம்பை உடுக்கை

ஸ்ரீ முனீஸ்வரன் பம்பை  உடுக்கை 

அருள்வாக்கு ,போய் ஓட்டல் ,முதலிய     தெய்விககாரியங்களு க்கு  நல்ல து

செய்வினைதுன்பம் விலக 
ஆவிஏவல் முதலியவைகளிலிருந்து விடுபட 
எதிரிகள் நம்மைக்கண்டு அடங்க 
  செய்வினைமறைமுக எதிரி விலக
    கர்மவினைஊழ்வினை விலக.

ஸ்ரீ அம்மன் காப்பு

ஸ்ரீ அம்மன்  காப்பு    
அன்னை  கோவில் பூஜை செய்து வழங்கபடுகின்றன         
அருள்வாக்கு ,போய் ஓட்டல் ,முதலிய     
செல்லும் இடங்களில் காரியங்கள் நிறைவேற 
வாழ்க்கை பிரகாசமடைய 
செய்வினைமறைமுக எதிரி விலக 
கல்வியில் சிறக்க 
குழந்தைபாக்கியம் உண்டாக 
 கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க 
எதிர்பார்த்த பணவரவுஐஸ்வர்யம் உண்டாக 

 எதிர்பார்த்தப்படியே வீடுமனை வாங்க நினைத்த காரியம் வெற்றி அடையவிளையாட்டுத்துறையில் புகழ்பெற
 விவசாயத்தில் நல்ல மகசூல் பெற 
பொதுவான தோஷங்கள் விலக